அசாமில்.நடப்பது என்ன?


இந்திய மக்களவை மற்றும் மாநிலங்களைவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து அசாமில் நிலைமை மோசமாகி வருகிறது.
அசாமின் பல பகுதிகளில் வன்முறை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், போராட்டக்காரர்கள் வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கெளஹாத்தி உள்ளிட்ட பல இடங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்துக்கு செல்லக்கூடிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டதோடு, விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அசாமில் உள்ள டின்சுகியாவில் உள்ள பனிடோலா ரயில் நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டது.
தொடரும் போராட்டங்கள்படத்தின் காப்புரிமைEPA
அசாமில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோதி, "யாரும் உங்களின் உரிமைகளை பறிக்க முடியாது. உங்கள் அடையாளம் மற்றும் அழகான கலாசாரத்தை யாரும் எடுக்க முடியாது" என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த மசோதா தொடர்பாக அசாம் மக்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அசாமின் திப்ரூகார் நகரத்திலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் சர்பானந்த சொனோவல் வீட்டில் போராட்டக்காரர்கள் கற்களை எறிந்து போராட்டம் செய்தனர்.