பெண்களின் மீதான இணைய வன்முறை அதிகரித்துள்ளதற்கு சான்றாக பல செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இன்றைய நவீன சமூக ஊடகங்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இல்லை. ஆனால், அதன் காரணமாக நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு பல துறைகளில் கால்பதித்து, பொது வெளியில் இயங்கிக் கொண்டிருக்கும் பெண்கள் மீண்டும் ஒரு வட்டத்திற்குள் சுருங்கி விட முடியாது.
அதே சமயம், நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சமூக வலைத்தளங்கள் பற்றிய முறையான விழிப்புணர்வும் , அதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் தொழில்நுட்ப மற்றும் சட்ட ரீதியாக அந்த சிக்கல்களில் இருந்து எப்படி மீண்டு வருவது என்று அறிந்திருப்பதும் அவசியமாகிறது.
ஏனெனில் போலி ஐடி-யில் இயங்குபவர்கள் மிகவும் தெளிவாக , தம்மை மிகவும் நாகரீகமானவர்களாக காட்டிக்கொள்ளும் அளவிற்கு தங்கள் முகநூல் கணக்குகளை உருவாக்கி வைத்துள்ளனர். பெண்களின் வீடியோக்களை வைத்து பல கோடிகள் புழங்க கூடிய பெருவியாபாரம் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த வியாபாரத்தில் முக்கியமாக நடைபெறுவது ஆபாச வீடியோக்கள் எடுப்பது. பெண்கள் வெளியிட்டுள்ள டாப்ஸ் மாஷ், டிக் டாக் வீடியோக்களை எடுத்து அதனை ஆபாச வீடியோக்கள் நடுவே இணைத்து ஆபாச வலைத்தளங்களில் வெளியிடுவது.முகத்தை மாப் செய்து பயன்படுத்துவது,xxx வீடியோக்களில் பதிவேற்றுவது என பல்வேறு விஷயங்கள் இதில் நடைபெற்று வருகின்றது என்கிறார்
தேவையில்லாத செயலிகளை (app) அலைபேசியில் பதிவிறக்கம் செய்வதனை முதலில் தவிர்க்க வேண்டும்.இது போன்ற நபர்கள் முதலில் ஹாய் ஹல்லோ என்ற உரையாடல்களில் தொடங்குவர், இறுதியில் செக்ஸ் சாட்டில் சென்று நிற்கும்.எனவே, ஆண்கள் பாலியல் ரீதியாக உரையாடலை துவங்கும் போதே பெண்கள் தெளிவாகி விட வேண்டும்.சில முகநூல் கணக்குகள் பெண்களின் பெயரில் இருக்கும், ஒரு பெண் தானே இதை கேட்கிறாள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்போம், ஆனால் அது ஒரு ஆணாக இருக்கலாம். பெண்கள் வீட்டு முகவரியினை அல்லது அலுவலக முகவரியினை அனுப்பி விடுகின்றனர்.இந்த நபர்கள் கேமிரா பொருத்திய பரிசு பொருளை அனுப்பி, அதன் மூலமாக எளிதாக வீடியோக்களை எடுத்து விடுகின்றனர்.
அடுத்து ஒரு ஆணோடு இப்படி பாலியல் ரீதியாக உரையாடி இருந்து, அதை தவறு என்று உணரும் தருணத்தில் அதிலிருந்து முழுமையாக விலகி விடலாம்.ஆனால், பெண்கள் அதற்கு பின்தான் பெரிய தவறு செய்கின்றனர்.இந்த குறுஞ்செய்திகள் அல்லது அலைபேசி உரையாடல்களை வைத்து ஆண்கள் மிரட்டும் பொழுது அதற்கு பயந்து அவர்கள் அழைக்கும் இடத்திற்கு செல்வது, அவர்கள் என்ன சொன்னாலும் செய்வது என்ற நிலைக்கு சென்று விடுகின்றனர்.
பாலியல் மிரட்டல்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை. எந்த சூழலிலும் பதட்டமடையத் தேவையில்லை.முகநூல், யு டியூப், கூகுள் ஆகியவற்றில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை தவறாக பதிவிட்டு இருந்தால் அதை நீக்குவதற்கு பல வழிகள் இருக்கின்றன.image removal processing மூலமாக ஆபாசமாக பதிவிட்டுள்ள புகைப்படங்களை நீக்கி விட முடியும். கூகுள் வலைத்தளத்தில் reverse image processor பயன்படுத்தி எந்தெந்த வலைப்பகுதிகளில் புகைப்படங்கள் பகிர பட்டுள்ளது என்பதனை அறிந்து அதை நீக்கி விட இயலும்.
யூ ட்யூப் ல் காப்பி ரைட் படிவத்தினை சமர்ப்பித்தால் வீடியோ அகற்றப்படும். xxx வீடியோஸ் என்று சொல்லக் கூடிய ஆபாச வலைத்தளத்தில் abuse reporting form என்று ஒரு படிவம் உள்ளது.அந்த படிவத்தில் , இது என்னுடைய அனுமதி இல்லாமல் என்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க பதிவேற்ற பட்டுள்ளது என்று தெரிவித்தால் அந்த காணொளியை நீக்கி விடுவார்கள் என்கிறார் பத்மாவதி.
இந்த ஒரு சுதந்திரத்தை இயல்பாகவே வக்கிரபுத்தி உள்ள ஆண்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்கிறார். இதற்காக இணைய செயல்பாடுகளை குறைத்துக் கொள்ள கூடாது. ஆனால் , எந்த மாதிரியான நபர்களோடு நாம் பேசிக் கொண்டிருக்கின்றோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். மேலும் இணைய வன்முறைகளுக்கு எதிரான சட்டங்கள் குறித்தும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் .
பெண்கள் வெளியில் வந்து அவர்களின் கருத்து சுதந்திரத்தினையோ, இணைய சுதந்திரத்தினையோ வெளிப்படுத்தும் பொழுது அவர்களின் பாதுகாப்பினை உறுதி வேண்டிய பொறுப்பு அரசுக்கும் உள்ளது.யாராவது ஒருத்தர் அரசினை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் எழுதினாலோ, மீம்ஸ் போட்டாலோ தேடி வந்து கைது செய்யும் அரசாங்கம் இது போன்ற சம்பவங்களுக்கு மிகவும் விரைவாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் .
மேலும் முகநூல், ட்விட்டர் போன்ற நிறுவனங்களுக்கும் இதில் பொறுப்பு இருக்கின்றது. ஆபாச வீடியோக்கள் வெளியிடுதல் போன்ற குற்றங்கள் முகநூலில் நடக்கும் பொழுதே அதனை கண்டரியும் நுட்பத்திறன் இருப்பதால் அந்த நிறுவனங்களும் பொறுப்போடு நடந்து கொள்ளுதல் அவசியம்.
மேலும் , பாலியல் வக்கிர மனநிலை உடைய ஆண்கள் இது போன்றவற்றை ஆபாச வீடியோவாகவாகத்தான் பார்ப்பார்கள். இந்த வீடியோக்களை பரப்புவதால் சமுகத்தில் எந்த நல்ல மாற்றங்களும் விளையப்போவதில்லை மாறாக குற்றங்கள்தான் அதிகரிக்கும். எனவே, பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்களை, விபரங்களை வெளியிடுதல், வீடியோக்களை பரப்புதல் சமூக குற்றம் என்பதனை உணர்ந்து பொறுப்போடு இயங்க வேண்டும் என்கிறார்.
Post a Comment
Post a Comment