பண்டாரவளை பகுதியில் சேதம்


(க.கிஷாந்தன்)
பண்டாரவளை தந்திரியா பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் மோட்டர் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளது.
பண்டாரவளை பதுளை பிரதான வீதியில் தந்திரியா பகுதியில் அமைந்துள்ள மோட்டர் சைக்கிள் பழுது பார்க்கும் கடையின் மீது இன்று (05.12.2019) அதிகாலை பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
கடையின் பின் புறத்தில் உள்ள மண்மேடே இவ்வாறு சரிந்து விழுந்துள்ளது. இதன் காரணமாக கடையில் இருந்த புதிய மோட்டர் சைக்கிளில்கள் 12ம், பழுது பார்க்க வந்த மோட்டர் சைக்கிளில்கள் 6ம் சேதமடைந்துள்ளது.
அத்தோடு, மோட்டர் சைக்கில்களின் திருத்த பணிகளை மேற்கொள்ளும் உபகரணங்களும் முற்றிலும் சேதமமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அனர்த்தம் காரணமாக எவ்வித உயிராபத்துகளும் ஏற்படவில்லை என தெரிவிக்கும் கடை உரிமையாளர் பொருட்களுக்கே பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனினும் மண்மேடை அகற்றும் பணியில் பிரதேசவாசிகள் ஈடுப்பட்டுள்ளனர்.