#CAA ;கர்நாடகத்தில் 2 பேர், உ.பியில் ஒருவர் உயிரிழப்பு


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூரில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டபோது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் உயிரிழந்தனர்.
ஊடகத்தில் பேசிய மங்களூரு போலீஸ் ஆணையர் பி.ஹர்ஷா, இறந்த இருவரும் எதனால் இறந்தார்கள் என்ற விவரம் அவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தபிறகே தெரியும் என்று தெரிவித்தார்.
இறந்தவர்கள் பெயர்கள் ஜலீல் குட்ரொலி (43), நௌஷீன் பெங்கரீ (49) என்பதையும் அவர் கூறினார்.
போராட்டக்காரர்கள் பந்தர் போலீஸ் நிலையத்துக்கு தீ வைக்க முயன்ற பிறகே அவர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
மங்களூரூ நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஹர்ஷா கூறினார்.