"நான் எய்த அம்புகள்"


பாறுக் ஷிஹான்
முனை மருதவன் எம்.எச்.எம்.இப்ராஹிம் எழுதிய 'நான் எய்த அம்புகள்' நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை(11)  முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமாகி மாலை 5 மணி வரை இடம்பெற்றது.

குறித்த நூலினை சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்க பேரவையின் பூரண அணுசரனையில் லக்ஸ்டோ மீடியா ஊடக அமைப்பு மற்றும் தமிழ் எழுத்தாளர் சங்கம் இணைந்து வெளியீட்டதுடன்   சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் இடம்பெற்றது.

 இந்நிகழ்விற்கு  பிரதம அதிதியாக  முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான    ஏ . எல் . எம் . அதாவுல்லாஹ்வும்   கௌரவ அதிதிகளாக  முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர்   எம் . எம் .  மயோன் முஸ்தபா , அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்பு செயலளார்    கே . எம் . அப்துர் ரஸாக் ( ஜவாத் ) ,  ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனைத் தொகுதி  அமைப்பாளர்  சட்டத்தரணி . எம் . எஸ் . அப்துர் ரஸாக் உம் ,  சிறப்பு அதிதிகளாக கைத்தொழில் அபிவிருத்தி ஊக்குவிப்பு அமைச்சின்  மேலதிக செயலாளர்  ஏ . எல் . எம் . சலீம் , கல்முனை பிரதேச செயலாளர்  எம் . எம் . நஸீர் உம்  ,  விசேட விருந்தினர்களாக   உலமாக் கட்சி  தலைவர் மௌலவி . முபாறக் அப்துல் மஜீத் , மணிப்புலவர் மருதூர் ஏ . மஜித் ,தற்போதைய  பிரதம மந்திரி  மகிந்த ராஜபக்‌ஷவின்  இணைப்புச் செயலாளர் ஷிராஸ்  ஜுனுஸ், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின்  கலை  கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர்  ,ஆகியோரும் கலந்து கொண்டு நூலின் சிறப்பு பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.

  தொடர்ந்து    நூல் வெளியீட்டின் முதற் பிரதியினை முபாறக் டெக்ஸ்டைஸ் நிறைவேற்றுப் பணிப்பளார்  அல் ஹஜ் . எம் . எஸ் . முபாறக் மற்றும்   முதன்மை பிரதியினை  சாய்ந்தமருது  ட்ரிபிள் பைவ்   நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ . சீ . எம் . இக்பால்  பெற்றுக்கொண்டனர்.தொடர்ந்து நூல் பற்றிய திறனாய்வினை   சித்தி வெல்பை ஆய்வுப் பேரவை தலைவரும்  சட்டத்தரணியுமான மர்சூம் மௌலானாவும் நூல் பற்றிய கருத்துரைகளை முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர்   கலாபூசனம் ஏ . பீர்முஹம்மத்தும்   பேராதனைப் பல்கலைக்கழக  மெய்யியல் துறை முதுநிலை விரிவுரையாளர் முபிஸால் அபூபக்கரும்  ஏற்புரையினை  முனை மருதவன் எம் . எச் . எம் . இப்றாஹிமும்  மேற்கொண்டனர்.

இந்நிகழ்ச்சித் தொகுப்பினை   பிறை எப் .  அறிவிப்பாளர் எம்  ஏ . எல் . நயீம்   அறிவிப்பாளர்களான  சப்னா அமீன்  எம் . பி . எம் . றின்சான்  ஆகியோர் இணைந்து நடாத்தினர்.இந்நிகழ்வில்  அரசியல் பிரமுகர்கள் கலை இலக்கியவாதிகள்  கல்விமான்கள் வர்த்தகபிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள்  ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.