மட்டக்களப்பு விபத்தில் ஒருவர் பலி




-அம்பாறை நிருபர் ஷிஹான்-

பெண் ஒருவர் செலுத்திய கார் வேக கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதியதனால் மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தானது மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் இன்று (3) காலை இடம்பெற்றதுடன் இவ்விபத்தில் படுகாயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றும் இருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு ஊறணி பகுதியில் உறவினர் வீட்டில் இருந்து ஆரையம்பதி நோக்கி சென்ற கார் தனது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்நிலையில் இவ்விபத்தில் உயிரிழந்தவர் வயது 72 உடையவர் எனவும் தனது ஊரான அரசடித்தீவுக்கு செல்வதற்கு நின்ற வேளையில் இவ்வாறு விபத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.