தரிசிப்பு


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று (11) கண்டி தலாதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதன் போது தலதா மாளிகையின் தியவடன நிலமே ஜனாதிபதியை வரவேற்றதுடன், வழிபாடுகளின் நிறைவு செய்துகொண்ட ஜனாதிபதி அங்கிருந்த மக்களிடத்திலும் சுமூகமாக கலந்துரையாடியுள்ளார்.
இதன் போது மஹிந்தானந்த அழுத்கமகே, எஸ்.பி.திஸாநாயக்க, கெஹெலிய ரம்புக்வெல்ல, திலும் அமுனுகம உள்ளிட்ட அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.