குறிஞ்சி நகரில் இருவர் கைது


மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் துப்பாக்கியொன்றுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையிலேயே ரி-56 ரக துப்பாக்கியொன்றும், அதற்குப் பயன்படுத்தப்படும் 27 துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.