பிரிட்டனில் முடக்கநிலை



பிரிட்டனில் நிலைமை மேலும் மோசமாகும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ள நிலையில் கணிசமான காலத்துக்கு முடக்க நிலைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
வரும் வாரங்களில் சமூக விலகலை கடைபிடிப்பது மிகவும் அவசியம் என்று பிரிட்டனின் அமைச்சரவை அலுவலக அமைச்சர் மைக்கேல் கோவ் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் 'கணிசமான காலத்துக்கு கடுமையான நடவடிக்கைகள் இருக்கும்' என்று அவர் கூறியிருந்தாலும், அது எவ்வளவு காலம் என்று குறிப்பிடவில்லை.
ஜூன் மாதம் வரை இது நீடிக்கலாம் என்று மூத்த அரசு ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.