பாதிப்பு 10 லட்சத்தை எட்டும் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
ஐரோப்பாவை மொத்தமாக எடுத்துக் கொண்டால், அங்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால், இந்த கொரோனா வைரஸ் தொற்று என ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரஸ் எச்சரித்துள்ளார்.
ஐரோப்பாவை மொத்தமாக எடுத்துக் கொண்டால், அங்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால், இந்த கொரோனா வைரஸ் தொற்று என ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரஸ் எச்சரித்துள்ளார்.
நெதர்லாந்தில் மேலும் புதிதாக 134 பேர் உயிரழந்திருக்க, அங்கு உயிரிழந்த நிலையில், மொத்த எண்ணிக்கை 1,175ஆக உள்ளது. எனினும், மக்கள் மருத்துவமனைகளுக்கு செல்வது குறைந்து காணப்படுகிறது.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஹஜ் புனித யாத்திரையாக மெக்கா மற்றும் மதீனா செல்வோர் தங்களது முன்பதிவுகளை தற்போது செய்யாமல், சற்று தாமதமாக்கும்படி முஸ்லிம் மக்களை செளதி அரேபிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
சுவிட்ஸர்லாந்தில் தற்போது வரை 488 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,777ஆக உள்ளது. இதுவரை அங்கு மொத்தம் 24 பேர் இறந்துள்ளனர்.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல மருத்துவ உபகரணங்களின் தரம் குறித்து பல ஐரோப்பிய நாடுகள் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதன் தரத்தை உறுதிபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறதாக சீனா தெரிவித்துள்ளது.
தேசிய நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஐரோப்பிய யூனியனிடம் கடன் நிவாரணத்திற்காக 100 பில்லியன் டாலர்ளை, அவசர நிதியாக ஆப்பிரிக்க நித அமைச்சர்கள் கேட்டுள்ளனர்.
Post a Comment
Post a Comment