கொரோனா வைரஸ் தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் இரானில் “ஆபத்து குறைந்த” வணிக நடவடிக்கைகள் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என அந்நாட்டு அதிபர் ஹசன் ரூஹானி கூறியுள்ளார்.
ஆனால் எந்தெந்த நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்று அவர் தெளிவாக கூறவில்லை.
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள், மத வழிப்பாட்டுதலங்கள் ஆகியவைதொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்ட அவர், ஏப்ரல் 18ஆம் வரை நகரங்களுக்கு இடையே பயணிப்பதும் தடை விதிக்கப்பட்டிருக்கும் என தெரிவித்தார்.
இரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,603ஆக உயர்ந்திருக்கிறது. 58,226 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
முதன்முதலில் அதிகமான மக்களுக்கு கொரோனா தொற்று பரவிய ஒருசில நாடுகளில் இரானும் ஒன்று. உண்மையில் அங்கு உயிரிழந்திருப்பவர்களின் எண்ணிக்கை, அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட அதிகளவில் இருக்கும் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர்.
Post a Comment
Post a Comment