கிரிக்கெற் வீரர் செஹான் மதுசங்க, விளக்க மறியலில.


இலங்கை கிரிக்கெற் அணியில் 2018 ல் அறிமுகமானவர் செஹான் மதுசங்க.பங்களாதேஸ் அணிக்கு எதிராக இவர் ஹெற்றிக் சாதனை படைத்தார்.

இவர் கடந்த ஞாயிறன்று ஊடரங்கு சட்ட விதிமுறைகளை மீறி தமது காரில் பன்னல பிரதேசத்தில் பயணித்துள்ளார். இவரைப் பரிசோதித்த காவல் துறையினர் இவரிடமிருந்து 2 கிராம் பெறுமதியான ஹெரோயினை இவரது உடமையில் வைத்திருந்த குற்றச் சாட்டில் கைது செய்துள்ளனர். இவர் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட வேளையில், இவரை இரண்டு வாரங்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது.