பிரதான வீதியில் மண்சரிவு - போக்குவரத்து பாதிப்பு


(க.கிஷாந்தன்)

அட்டன் - நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் டிக்கோயா, வனராஜா சமர்வில் பகுதியில் இன்று (16.05.2020) அதிகாலை ஏற்பட்ட மண்சரிவால் அவ்வீதியூடாக ஒருவழி போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றது.

நேற்று (15.05.2020) மாலை முதல் விடாது பெய்த அடைமழை காரணமாகவே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்துக்காக இவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் விழிப்பாகவே இருக்க வேண்டும் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இராணுவம், பொலிஸார் மற்றும் இதர தரப்புகள் இணைந்து வீதியில் சரிந்துள்ள மண், மரம் ஆகியவற்றை அகற்றி பாதையை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளை, தொடர்மழையால் மலையகத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்து வருகின்றது.