குஜராத் ரசாயன தொழிற்சாலையில் பெரும் விபத்து


குஜராத் மாநிலம், பாருச் மாவட்டத்தில் யஷாஸ்வி ரசாயன நிறுவனத்தில் இன்று (ஜூன் 3) பகலில் ஒரு பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக வெளிவந்த காணொளியில் மிகப்பெரிய அளவில் புகை வெளியேறுவதை பார்க்க முடிந்தது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரசாயன ஆலையில் ஏற்பட்ட இந்த வெடி விபத்தின் தீவிரத்தை, இந்த பகுதியில் இருந்த மற்ற நிறுவனங்களின் உடைந்த ஜன்னல் கண்ணாடிகள் காட்டுவதாக உள்ளது.