விவசாயிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்குஜனாதிபதி நடவடிக்கை


உர வழங்கல், விநியோகம் மற்றும் பயன்பாடு தொடர்பில் விவசாய சமூகம் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வை பெற்றுக்கொடுத்து தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (09) ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.


நீண்ட காலமாகப் பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பமாவதைத் தொடர்ந்து பல மாகாணங்களில் உரப் பிரச்சினை எழுகின்றது. சிறிய, நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் அதற்குத் தீர்வு கண்டறியப்பட வேண்டும் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

இரசாயன உரப் பாவனை காரணமாக மண்ணின் தன்மை பெருமளவு மாற்றமடைந்துள்ளது. அதிக அறுவடையை எதிர்பார்த்து விவசாயிகள் அதிகளவு உரத்தைப் பயன்படுத்திவருகின்றனர். இந்த நிலைமைகளிலிருந்து படிப்படியாக விலகி சேதன உரப் பாவனைக்குத் திரும்ப வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினேன்.

சிறு போக பயிர்ச்செய்கை ஆரம்பமாவதுடன் உரப் பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது. நெல்லுக்கு அதிக விலை கிடைப்பதன் காரணமாக விவசாயிகள் பெருமளவில் நெற் பயிர்செய்கையில் ஈடுபடுகின்றனர். விவசாய இறக்குமதிகளுக்கான கட்டுப்பாடுகள், தோட்டப் பயிர்ச்செய்கை மற்றும் மரக்கறி, பழங்கள் மற்றும் தானிய பயிர்ச்செய்கை காணிகளின் அளவு அதிகரித்துள்ளதையும் உரப் பிரச்சினைக்குக் காரணமாகும் என்று அதிகாரிகளும் ஆளுநர்களும் ஜனாதிபதிக்குச் சுட்டிக்காட்டினர்.

கடந்த காலத்தைப் போன்று நாட்டின் ஏனைய மாவட்டங்களின் விவசாயிகளையும் சேதன உரத்தினை பயன்படுத்தச் செய்வதன் மூலம் சில சுகாதார பிரச்சினைகளிலிருந்தும் விடுபட முடியும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

சேதன உரத்தினை உரிய நியமங்களுடன் உற்பத்தி செய்வது குறித்து விசேட கவனம் செலுத்துமாறும், சேதன உரத்தினை விரைவாகப் பயன்படுத்தக் கூடிய பயிர்ச்செய்கை என்னவென்று கண்டறியுமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார். சேதன உரத்தைப் பயன்படுத்திப் பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்கள் அடைந்துள்ள முன்னேற்றம் பற்றிக் கண்டறிய வேண்டியதன் தேவையையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். சேதன உரப் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் அறுவடைகளைக் கொள்வனவு செய்யும் போது அதிக விலையை நிர்ணயிப்பதற்கும் அதற்காக நிவாரணம் வழங்குவதற்கும் கவனம் செலுத்தப்பட்டது.

சேதன உர உற்பத்தியை பாரியளவிலான வியாபாரமாக முன்னேற்றுவதன் மூலம் இரசாயன உரத்திற்கான கேள்வியைக் குறைக்க முடியும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். உலக சந்தையில் சேதன உர விநியோகத்திற்கான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டியதன் தேவைப் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

அமைச்சர் சமல் ராஜபக்ஷ, வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் உள்ளிட்ட  மாகாண ஆளுநர்கள், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, விவசாய அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுமேத பெரேரா ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.