சிறைச்சாலை உத்தியோகத்தர் நௌபர் விபத்தில் உயிரிழப்பு


நேற்றிரவு  களுவாஞ்சிக்குடி கல்லாறில் இடம்பெற்ற விபத்தில், சிறைச்சாலை உத்தியோகத்தர் நௌபர் அகால மரணமானார்.

சாய்ந்ததருதைப் பிறப்பிடமாகக் கொண்ட மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தரான இவர், முச்சக்கர வண்டியொன்றில், தமது நிலையப் பொறுப்பதிகாரியுடன் பிரத்தியேக விஜயம் செய்த வேளையில் இரவு 11.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்ட மர்ஹீம் நௌபர், 4 பிள்ளைகளின் தந்தையாவார்.