சிராம்பியடிச் சந்தியில் விபத்து,ஒருவர் பலி


யாழ்ப்பாணம்- பலாலி வீதி , பருத்தித்துறை வீதி இணையும் சிராம்பியடிச் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற குறித்த விபத்தில் வடக்கம்

பரை– பண்ணாகத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பொறியியல் பீடம், தொழில்நுட்ப பீடம் மற்றும் விவசாய பீடத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களை யாழ்ப்பாணத்திலிருந்து ஏற்றிச் செல்லும்  சிறிய ரக பேருந்து  ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பத்தலைவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்