பிரசார நடவடிக்கைகள் 2ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு


தேர்தல் பிரசார நடவடிக்கைகள் 2ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு

பொதுத் தேர்தலை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்தையும் எதிர்வரும் 2 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இம்முறை பொதுத் தேர்தலுக்கான 12,985 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் நாடு முழுவதும் 71 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இம்முறை தேர்தலுக்காக மூன்றரை இலட்சம் அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடவுள்ளனர்