சீன நிறுவனத்துக்கு 45,000 கோடி ரூபாய் இழப்பு


இந்தியாவில் டிக்-டாக் மீது விதிக் கப்பட்ட தடையால், அதன் தாய் நிறுவனமான பைட்-டான்ஸ் நிறுவனத்துக்கு ரூ.45,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என சீன அரசு ஊடகம் கருத்து தெரிவித்துள்ளது என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.

சீன செயலிகளை தடை செய்யும் இந்திய அரசின் முடிவால் டிக்-டாக், ஹலோ செயலி ஆகியற்றின் தாய் நிறுவனமான 'பைட்-டான்ஸ்'-க்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும். செல்போன் செயலிகளை ஆய்வு செய்யும் 'சென்சார் டூவர்' நிறுவனம் அளித் துள்ள புள்ளிவிவரப்படி, கடந்த மே மாதம் டிக்-டாக் செயலி 11.2 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட் டுள்ளது என சீன அரசு ஊடக மான 'குளோபல் டைம்ஸ்' கட்டுரையை மேற்கோள் காட்டி இந்து தமிழ் திசை கூறுகிறது.

அமெரிக்காவில் பதிவிறக்கம் செய்யப்பட்டதை விட இரு மடங்கு இந்தியாவில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அரசு தடை விதித்ததால், சீன முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் நம்பிக்கையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிக்-டாக் செயலிக்கு முக்கிய வருவாய் ஆதார நாடாக இந்தியா இல்லாவிடினும் அந்த செயலியை அதிகம் பதிவிறக்கம் செய்த முன் னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இந்திய சந்தையில் பைட்-டான்ஸ் சுமார் ரூ.7,473 கோடி முதலீடு செய்துள்ளது என்கிறது அந்தச் செய்தி.