உலகின் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்ப்பட்ட முதலாவது பெண் பிரதமர் இலங்கையில் ஜீலை 21 இல் சிம்மாசனம் ஏறினார். அவர் சிறிமாவோ பண்டாரநாயக்க. பெண்கள் அரசியலில் பிரவேசித்து 60 ஆண்டுகள் ஆகின்றன.
அரசியல் பின்னணி
தனது கணவர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா கொல்லப்பட்டபின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். ஜூலை 21, 1960 இல் முதன் முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1965 இல் நடந்த பொதுத்தேர்தலில் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து 1970 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கட்சியை வழி நடாத்தினார். 1970 பொதுத்தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து பெரும் வெற்றி பெற்று இரண்டாம் முறை மீண்டும் பிரதமரானார். 1977 இல் நடந்த தேர்தலில் கட்சி படு தோல்வி அடைந்தது. 1980 இல் அன்றைய ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் ஆட்சியினால் ஊழல் குற்றச்சாட்டுகளில் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு குடியுரிமை பறிக்கப்பட்டு ஏழு வருடங்களுக்கு அரச பதவிகளை ஏற்கத் தடை செய்யப்பட்டார்.
1994 ஆம் ஆண்டு இவரது புதல்வியான சந்திரிக்க பண்டாரநாயக்க பதவியேற்றபின் மீண்டும் பிரதமராக 2000 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரைப் பணிபுரிந்து, தமது உடல் தளர்வு காரணமாக ராஜினாமாச் செய்தார். 2000 ஆண்டு ஒக்டோபர் 10ந் திகதி இவர் இயற்கை மரணமெய்தினார்
Post a Comment
Post a Comment