கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம்


நாடளாவிய ரீதியில் சுமார் 1,500 கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் பரீட்சைகளை நடாத்தி, தகுதி வாய்ந்தோரை தெரிவு செய்யவுள்ளதாக அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

அவ்வாறில்லையெனின், ஏற்கனவே நடைபெற்ற பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அதிக புள்ளிகளை பெற்றுக் கொண்ட விண்ணப்பதாரிகளை இணைத்துக் கொள்வதற்கு இயலும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பொதுத் தேர்தலின் பின்னர் இது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

நாடளாவிய ரீதியில் 14,022 கிராம உத்தியோக பிரிவுகள் உள்ளன.