இங்கிலாந்து வெற்றி: தொடரை கைப்பற்றியது


அயர்லாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்று உள்ளது. இந்த தொடர் 2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்குரிய தகுதி சுற்றான "சூப்பர் லீக் " லாக கணக்கிடப்படுகிறது.

கடந்த 30-ந்தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதிய  2-வது ஒருநாள் போட்டி நேற்று பகல்-இரவாக சவுத்தாம்ப்டனில் நடந்தது.

முதலில் ஆடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்தது. கேம்பர் அதிகபட்சமாக 68 ரன் எடுத்தார். அவர் கடந்த ஆட்டத்திலும் அரைசதம் அடித்து இருந்தார்.