பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு நினைவு இல்லம்





சென்னை: 

மறைந்த இந்திய பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நினைவு இல்லம் கட்டப்படும் என்று அவரது மகன் எஸ்.பி.சரண் பேட்டியளித்துள்ளார். மேலும், எஸ்.பி.பி. உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை பார்வையிட [போலீசுடன் ஆலோசித்து மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.