மூன்று விசேட அதிரடிப்படை முகாம்களை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்


 


பத்திற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து களனி களுபோவில ராஜகிரிய பகுதிகளில் உள்ள மூன்று விசேட அதிரடிப்படை முகாம்களை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்.

பேலியகொட மீன்சந்தைக்கு மீன் வாங்குவதற்காக சென்றவர்களே கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


பாதிக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினரில் சிலர் முன்னர் விசேட பிரமுகர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.