“இந்த தேசத்தின் மக்கள் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அவர்கள் நமக்கு தெளிவான ஒரு வெற்றியை தந்துள்ளனர்,” என்று ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
“நீங்கள் என்மீது வைத்த நம்பிக்கைக்கும் உறுதிக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். வேற்றுமையை கோராமல் ஒற்றுமையை கோரும் ஒரு அதிபராக நான் இருப்பேன்.
சிவப்பு நிற மாகாணங்கள் நீல நிற மாகாணங்கள் என்றில்லாமல், பல மாகாணங்கள் ஒன்றிணைந்த அமெரிக்காவாக நான் பார்ப்பேன். உங்கள் நம்பிக்கையை பெற முழு மனதாக பணியாற்றுவேன்.”
என்று அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா என்பது மக்களை குறித்தது. நான் இந்த பதவிக்கு வந்ததற்கு காரணம், அமெரிக்காவின் ஆன்மாவை மீட்டெடுக்க, இந்த நாட்டின் முதுகெலும்பான நடுத்தர வர்க்க மக்களை மறுகட்டமைக்கவும், மீண்டும் அமெரிக்காவை அனைவரும் மதிக்கும்படியும், நாட்டில் ஒற்றுமையை உருவாக்கவும்தான் நான் பதவியேற்றுள்ளேன். தனது இந்த நோக்கத்திற்காக பலர் வாக்களித்துள்ளது குறித்து தான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளதாக கூறிய அவர், தற்போது கடமையாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாக தெரிவித்தார்.
தனது தேர்தல் பிரசாரத்திற்கு உதவிபுரிந்த பல்வேறு தரப்பினருக்கும் நன்றி தெரிவித்த பைடன், டிரம்பிற்கு ஆதரவளித்தவர்கள் குறித்தும் உரையாற்றினார், “ஒவ்வொருக்கும் ஒரு வாய்ப்பை வழங்கப்பட வேண்டும். கசப்புகளை ஒதுக்கி வைத்து, ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வோம், நமது எதிர்தரப்பினரை எதிரிகளாக நடத்துவதை நிறுத்துவோம்,” “எனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் எனக்காக வாக்களித்தவர்களுக்காக பணி செய்வதுபோலவே நான் கடுமையாக பணி செய்வேன்,” தனது முதல் பணி கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதுதான் என்று கூறிய பைடன், “நாம் இயல்பு நிலைக்கு செல்ல அதுதான் ஒரே வழி,” “திங்களன்று, முன்னணி விஞ்ஞானிகள், நிபுணர்களை பதவி மாற்ற ஆலோசகர்களாக நான் எடுத்துரைப்பேன். அவர்கள் பைடன் மற்றும் ஹாரிஸின் கொரோனா கொரோனா கட்டுப்பாட்டு திட்டத்தை செயலாக மாற்ற உதவி செய்வர், இந்த பணி ஜனவரி 20ஆம் தேதி 2021ஆம் ஆண்டு தொடங்கும்.
Post a Comment
Post a Comment