"முஸ்லிம்கள் குரான் படிப்பதை நிறுத்த வேண்டும்"


 


முஸ்லிம்களுக்கு எதிராக உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் 'இந்து பஞ்சாயத்து' கூட்டப்பட்டதாகவும், வைரலான அதன் காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"உ.பி.யின் மீரட்டில் மாநில அரசின் சவுத்ரி சரண்சிங் பல்கலைக்கழகம் உள்ளது. இதில் ஐந்து நாட்களுக்கு முன் சங்கராச்சார்யா பரிஷத் எனும் அமைப்பின் தலைவரான சுவாமி ஆனந்த் ஸ்வரூப் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது.

'இந்து பஞ்சாயத்து' எனப் பெயரிடப்பட்ட அக்கூட்டத்தில் ஏராளமான வலதுசாரி சிந்தனையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் தலைமை ஏற்று பேசிய சுவாமி ஆனந்த் ஸ்வரூப், "முஸ்லிம்களுக்கு நான் கூறிக்கொள்வது என்னவென்றால், எங்களுடன் நீங்கள் இணைந்திருக்க வேண்டும் எனில், முதலில் அனைவரும் குரான் படிப்பதை நிறுத்த வேண்டும்" என்று கூறுவது சர்ச்சையாகி உள்ளது.