Mohammed Asmy -EVR.
கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்து வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டிருந்த ஜனாஸாக்களின் முதலாவது நல்லடக்கம் இன்று (05) பிற்பகல் இடம்பெற்றது.
கொரோனா தொற்றினால் உயிரிழந்த இரண்டு பேரின் சடலங்கள் இலங்கை கிழக்கு மாகாணத்தின் ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படையினர் மற்றும் சுகாதாரப் பிரிவினர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இன்று பிற்பகல் 4.00 மணி வரை இரு ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டன.
கொவிட் தொற்றினால் மரணமடைந்த, மட்டக்களப்பு கோட்டைமுனையைச் சேர்ந்த 72 வயதுடைய பெண்ணின் ஜனாஸா, ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டு அங்கு ஜனாஸாத் தொழுகை நடாத்தப்பட்டு பின்னர் பலத்த பாதுகாப்புடன் ஓட்டமாவடிக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இதேவேளை #COVID19LKA ஜனாஸாக்கள் 9 இதுவரை அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment