கல்முனை நகரம் ஓர் பெரும் விரூட்சத்தை இழந்தது


 


வி.சுகிர்தகுமார் 0777113659


கல்முனை நகரம் ஓர் பெரும் விரூட்சத்தை  இழந்தது  என  கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்  தெரிவித்தார்.

கல்முனை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகங்களில் கடமையாற்றிய முன்னாள் பிரதேச செயலாளர் கே.லவநாதன் அவர்களின் மறைவு தொடர்பில் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முந்நாள் கல்முனை பிரதேச செயலக செயலாளர் திருவாளர் லவநாதன் இன்று இறைவனடி சேர்ந்தார்
- எனது இளமைக்கால நினைவாகவும் நட்பாகவும் இன்று வரை மறக்க முடியாதவர்  அண்ணன் லவநாதன் அவர்கள்.

உண்மையில் இன்று கல்முனையில் தமிழரின் அடையாளத்தை பதித்துச்சென்றவர் அண்ணன் லவநாதன் என்பதை எவராலும் மறுக்கமுடியாது.
இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் தமிழர்களின் அடையாளத்தை பறைசாற்றி நிற்கின்ற பிள்ளையார் ஆலையம் இவரின் அளப்பரிய சமூக சமயப்பற்றை பறைசாற்றுகிறது.
சமூக சேவையிலும் சரி,
ஆலய விவகாரங்கள் மற்றும் ஆலய நூல்வெளியீடுகள் மற்றும் ஆலைய வரலாறுகளை பேணிப்பாதுகாப்பதிலும் அண்ணனின் சேவை மகத்தானது. நூல்வெளியீடுகளிலும்  விளையாட்டு நிகழ்வுகளிலும் இளைஞர்களையும் கல்முனை பொதுஅமைப்புகளையும் ஊக்கப்படுத்தி தனதுஉச்சக்கட்ட சேவையை தனது இறுதிமூச்சுவரை செய்து முடித்திருக்கிறார்.

குறிப்பாக கல்முனை ஆதார வைத்தியசாலையின்பொருளாதார இடவசதிகளின் தேவைக்காக சுமார் இரண்டரை ஏக்கர் காணியை பெற்றுக்கொடுத்த மகான் அண்ணன் லவநாதன் ஆவார்.

ஆனால் துரதிஷ்டவசமாக இன்று மீளா பயணத்தில் நம் முன்னோர்களோடு இணைந்துகொண்டார் அண்ணன் லவநாதன் அவர்கள்.
அவரை இறைவன்  பொருந்திக்கொண்டு - பாவங்களை மன்னித்து -  சொர்க்கத்தில் உயர்ந்த ஸ்த்தானத்தை  வழங்குவானாக.
நன்றி
கல்முனை மாநகரசபை உறுப்பினர்
சந்திரசேகரம் ராஜன்