நுவரெலியா மாவட்டத்தில் நேற்று 167 பேருக்கு கொரோனா



 (க.கிஷாந்தன்)

 

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று 167 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி அக்கரபத்தனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 26 பேருக்கும், பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்கும், டயகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31 பேருக்கும், திம்புள்ள பத்தன சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், ஹங்குராங்கெத்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஹட்டன் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்கும், கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவருக்கும், நானுஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 32 பேருக்கும், பூண்டுலோயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவருக்கும் பிசிஆர் பரிசோதனைமூலம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.