அரசியல் கைதிகள், 16 பேர் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை


 

Sli

வரலாற்றில் முதல் முறையாக தமிழ் அரசியல் கைதிகள் எனப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மொத்தம் 93 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிறு குற்றங்கள் புரிந்த 77 பேருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.