கொரோனாவால் கல்முனை பிராந்திய சுகாதார பிரிவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 3 பேர் மரணம்


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவை சேர்ந்த மூவர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளதாகவும்  16 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார் .

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட   ஆலையடிவேம்பைச் சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையிலும்  அம்பாறை வைத்தியசாலையில் சம்மாந்துறையைச் சேர்ந்த நபர் ஒருவரும்  கல்முனைக்குடி அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மருதமுனையைச் சேர்ந்த நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர் .

எனவே வீரியமடைந்து வருகின்ற கொரோனா அனர்த்தத்திற்கு முகம் கொடுப்பதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்புகளை வழங்க முன்வர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.