ஆலையடிவேம்பு பிரதேசத்தில்,உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன


 


வி.சுகிர்தகுமார் 0777113659


கொவிட்19 மூன்றாம் அலை காரணத்தினால் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட வருமானம்  குறைந்த முதியோர்கள் மற்றும் வருமானம் குறைந்த பெண்தலைமைத்துவகுடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. 


கண்ணகிகிராமம்பனங்காடு நாவற்காடு சின்னமுகத்துவாரம் கோளாவில் 01 உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கே இன்று உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.


  புலம்பெயர்உறவுகள் மற்றும் உள்ளுர் உறவுகள் அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்களின்நிதியீட்டத்தின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களே இன்று ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பினரின் உதவியுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்களிப்புடன் இப்பொதிகள்மக்கள் காலடிக்கு கொண்டு சென்று வழங்கி வைக்கப்பட்டன. 


இவ்வாறுபெற்றுக்கொள்ளப்பட்ட 1600 ரூபா பெறுமதியான 330 பொதிகள் இதுவரை பிரதேசசெயலகத்தில் கையளிக்கப்பட்டதுடன் பிரதேச செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய கிராமங்கள்ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் முதற்கட்டமாக வழங்கப்பட்டன. இந்நிலையில்நிவாரணப் பொருட்களை பிரதேச செயலாளர் வி.பபாகரனின் ஆலோசனையும் பிரகாரம் முற்றிலும்சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்ற நிவாரணம் வழங்கும் பணியில் ஆலையடிவேம்பு பிரதேசசமூக நலன் அமைப்பினர் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பட்டதாரிபயிலுனர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டதுடன் பொதுமக்களின் வீடுகளுக்கு கொண்டு சென்றும்கையளித்தனர். 


இதேநேரம்தொடர்ந்தும் இப்பணி முன்னெடுக்கப்படும் நிலையில் பயணத்தடை காரணமாக பொதுமக்கள்பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதிகளவான மக்கள் நிவாரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றமைகுறிப்பிடத்தக்கது.