கடற்கரையோரங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் தாவரங்களை அகற்ற கோரிக்கை


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


அம்பாறை மாவட்ட  கடற்கரையோரங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் தாவரங்கள் அதிகளவாக  தென்படுவதை காண முடிந்தது.
 
  கடந்த இரு தினங்களுக்கு முன்னர்   இவ்வாறான கழிவுகள் அதிகளவாக கடற்கரையில் நிறைந்து காணப்படுகின்றன.

 அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு முதல்  கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான கழிவு அடையாளங்கள் தென்பட்டுள்ளன.

இவ்வாறான கழிவு  பரவலானது     கரையோர மீனவர்களது  மீன்பிடி தொழிலுக்கு பெரும் சிரமங்களை கொடுப்பதுடன் வலைகளிலும் சிக்கி வருகின்றன.

எனவே பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இவ்விடயத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என பாதிக்கப்பட்ட மினவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.