இலங்கையில் ஒருநாள் கொவிட் 19 தொற்று எண்ணிக்கை 4,000 ஐ கடந்தது..!


   


நாட்டில் இன்றைய தினம் இதுவரை 4,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 389,988 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர்.

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 18,769 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 342,159 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 40,733 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அத்துடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 183 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

அதன்பிரகாரம், இலங்கையில் கொரோனா தொற்றினால் பதிவான உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 7,366 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 



- Kayal