தினேஷ் ப்ரியந்த ஹேரத் புதிய உலக சாதனை,டோக்கியோ 2020 பராலிம்பிக்


 


டோக்கியோ 2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான எவ்46 பிரிவு ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை வீரர் தினேஷ் ப்ரியந்த ஹேரத் புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

டோக்கியோ 2020 பராலிம்பிக்கில் இலங்கைக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.

இன்று நடைபெற்ற இப்போட்டியில் 67.79 மீற்றர் ஈட்டி எறிந்தார் தினேஷ் ப்ரியந்த ஹேரத். இதன் மூலம் புதிய உலக சாதனையொன்றையும் அவர் படைத்தார்.