வங்கக்கடலில் 5.1 ரிச்டர் அளவில், நிலநடுக்கம்


 




தமிழ்நாடு மாநிலத்தின் சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வங்கக்கடலில் 5.1 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுமார் 12.39 மணியளிவில் சென்னை கடலோர பகுதிகளான திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.

எனினும் சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.