எருவிலைச் சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணி சோமசுந்தரம் மறைவு


 





#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
களுவாஞ்சிக்குடி எருவிலைச் சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிசுமான சோமசுந்தரம் இன்று களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் காலமானார்.



இவர் மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர் என்பதுடன் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற சட்டத்தரணிகள் அமைப்பினுடைய தலைவராகவும் செயற்பட்டவர். அக்கரைப்பற்று இராம கிருஸ்ணமிசன் முன்னாள் ஆங்கில ஆசிரியராகத் தொழிற்பட்ட இவர், ஓய்வுக்குப் பின்னர் சட்டத்துறையில் கால்பதித்தார். சமூக சேவைத்துறையில் தன்னை முழுமையாக அர்பணித்தவர்

 சட்டத்தரணிகளான குயிலினி ,சஞ்ஜீவனி ஆகியாரினதும் அன்புத் தந்தையுமாவார்.



இவரது பிரிவால் துயருறும் குடும்ப அங்கத்தவர்களுக்கும் ஏனைய சட்டத்தரணிகளுக்கும், கட்சிக்காரர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத்  www.ceylon24.com தெரிவித்துக் கொள்கின்றது.