ஆறுதல் வெற்றி பெற்றது, அவுஸ்திரேலியா



 டாக்கா:


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகளில் வங்காளதேசம் அணி வென்று தொடரையும் கைப்பற்றியது.

இந்நிலையில், 4-வது 20 வது ஓவர் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நயீம் 28 ரன்கள் எடுத்தார்.


நயீம்

இதையடுத்து, 105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை துவக்கிய ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்து  3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி வரும்  9-ம் தேதி நடைபெற உள்ளது.