உள்ளாடைகள் இறக்குவதற்கும் கட்டுப்பாடு


 


இலங்கைக்கு எதிர்வரும் நாட்களில் சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 100 வீத உத்தரவாத வைப்புத் தொகையை வங்கிகளில் வைப்புச் செய்ய வேண்டும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அத்தியாவசியமற்ற மற்றும் அவசர தேவையற்ற பொருட்களுக்கே இவ்வாறு வைப்புத் தொகை கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் அந்நிய செலாவனியினை சீரான நிலையினை பேணுவதற்காக டொலர்களின் இருப்பை தக்க வைத்துக் கொள்ளவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய மத்திய வங்கி பின்வரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை 2021 செத்தெம்பர் 08 அன்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில் உடனடியாகச் செயற்படும் வகையில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுடனான மற்றும் தேசிய சேமிப்பு வங்கியுடனான நாணயக் கடிதங்களின் அத்துடன் ஏற்றுக்கொள்ளல் நியதிகளுக்கெதிரான ஆவணங்களின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற தெரிவுசெய்யப்பட்ட அத்தியாவசியமற்ற/ அவசரமற்ற பொருட்களின் இறக்குமதிக்கெதிராக 100 சதவீத காசு எல்லை வைப்புத் தேவைப்பாட்டினை விதிப்பதற்குத் தீர்மானித்துள்ளது. காசு எல்லை வைப்புத் தேவைப்பாட்டினை விதிப்பதற்கான தீர்மானம், குறிப்பாக, ஊகவியாபாரத் தன்மையிலான மிதமிஞ்சிய இறக்குமதிகளை ஊக்கமிழக்கச்செய்வதன் வாயிலாக செலாவணி வீத உறுதிப்பாட்டினையும் வெளிநாட்டு நாணயச் சந்தை திரவத்தன்மையினையும் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்குத் துணையளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது

காசு எல்லை வைப்புத் தேவைப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள உற்பத்தி வகைகளின் தொகுப்பு 2019, 2020 மற்றும் 2021 இன் இதுவரையிலும் (தற்காலிகமானவை) ஒவ்வொரு வகையின் கீழுமான இறக்குமதிச் செலவினம் பற்றிய தகவல்களுடன் சேர்த்து கீழேயுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது.

குறித்த வைப்புத் தொகை கோரப்படும் பொருட்களின் பட்டியலில் ஆடைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் மக்களுக்கு அத்தியாவசியமான உள்ளாடைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளமை சமூக வலைத்தளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது