கிழக்கு மாகாண ஆளுநரின் சுதேச மருத்துவ பணி குழு உறுப்பினராக சுலைமான் நாஸிறூன் நியமனம்


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)



கிழக்கு மாகாண ஆளுநர்‌ அனுராதா யஹம்பத்‌ அவர்களினால் கொரோனா வைரஸால்‌ பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு, சுதேச வைத்திய முறையில் வைத்தியம் வழங்குவதற்கும், மக்களுக்கு உள்ளூர்‌ மருந்துகளை வழங்குவதற்கும்‌, நோயிலிருந்து விடுபட தேவையான மருந்துகளை பயன்படுத்தவும்‌, ஊக்குவிப்பதற்கும்‌ கிழக்கு மாகாணத்தில்‌ ஆயுர்வேத பணிக்குழுவை நியமித்துள்ளார்‌.

அந்த வகையில், இந்த பணிக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த சுலைமாலெவ்வை முஹம்மது நாஸிறூன், இம்மாதம் 06ம் திகதி முதல் செயற்படும் வண்ணம், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் விரிவுரையாளரும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான சிறந்த நிபுணர் குழு அமைப்பான வியத்மகேயின் அம்பாறை பிராந்திய உறுப்பினரும், நிந்தவூர் டுடே முகநூல் செய்திச்சேவையின் செய்திப் பிரிவிற்கான பொறுப்பதிகாரியும், அண்மையில் உதயமான நிந்தவூர் பிரதேச இளைஞர் தன்னார்வ அணியின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவரும் ஆவார்.

இந்நிலையில், கொரோனா வைரஸால்‌ பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சையை விரைவில்‌ வழங்குவதற்கான திட்டத்தை நிறைவேற்றும் முகமாக கிழக்கு மாகாண ஆளுநரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இக்‌குழு செயல்படுத்தவுள்ளது.

இதில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும்‌ அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை பிரதிதிதித்துவப்படுத்தும்‌ 17 உறுப்பினர்களை ஆளுநர்‌ இதன்போது நியமித்துள்ளார்.

குறித்த பணிக்குழுவில்‌ உள்ளடங்குவோர்‌ பின்வருமாறு,

1. வெங்கமுவே நாலக தேரோ (வனவாசல கோவில்‌, களனி)

2. துசித பி.வணிகசிங்க
(பிரதம செயலாளர்‌, கிழக்கு மாகாணம்‌)

3. ஏ.வி.எம்‌ அன்சார்‌
(செயலாளர்‌, மாகாண சுகாதார அமைச்சு, கிழக்கு மாகாணம்‌)

4. டாக்டர்‌ ஸ்ரீதர்‌
(மாகாண ஆணையாளர்‌, ஆயுர்வேத துறை, கிழக்கு மாகாணம்‌)

5. டாக்டர்‌ ஷியாமளா வர்ணகுலேந்திரன்‌ (கோனேஷபுரி ஆயுர்வேத மருத்துவமணை, திருகோணமலை)

6. டாக்டர்‌. மதிவம்‌ நிரஞ்சன்‌
(மருத்துவ கண்காணிப்பாளர்‌,
ஆயுர்வேத மருத்தவமனை, திருகோணமலை)

7. டாக்டர்‌. ஜெ.பாஸ்கரன்‌
(மருத்துவ மேற்பார்வையாளர்‌,
சித்த ஆயுர்வேத மருத்துவமனை, மட்டக்களப்பு)

8. டாக்டர்‌ எம்‌.அலியார்‌ நபீல்‌
(வைத்திய அத்தியட்சகர் - மாவட்ட ஆயுர்வேத மருத்துவமனை, நிந்தவூர்‌)

9. டி.எஸ்.எல். திஸாநாயக்க
(கிராமிய ஆயுர்வேத மருத்துவமனை, வெரன்னகெடகொட)

10. திருமதி ஜே.எல்‌.என்‌.டி. குமாரிஹாமி (ஆயுர்வேத மருந்தகம்‌, படையாதலாவ)

11. டாக்டர்‌. எம்‌.வெர்மேத்திரன்‌

12. டாக்டர்‌.டி எம்‌.ஏ.பிரியந்த வன்னியாராச்சி

13. டாக்டர்‌. டபிள்யு எம்.எஸ். சரத்‌ கோட்டயவத்த (ஆயுர்வேத மருத்துவர்‌)

14. சுலைமாலெப்பை முகம்மது நாசிறூன் (இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை)

15. டாக்டர்‌. தி.ஸ்ரீ சந்திரராஜா

16. டாக்டர்‌ டபிள்யூ.எம். நிலங்கா சுதர்சன (மாவட்ட ஆயுர்வேத மருத்துவமனை, தெஹியத்தகண்டிய)

17. சிந்தக விஜேவர்தன
(ஆளுநரின்‌ ஒருங்கிணைப்பு செயலாளர்‌ - கிழக்கு மாகாணம்‌)

மேலும், வேகமாக பரவும்‌ கொரோனா நோயைக்‌ கட்டுப்படுத்த உள்ளூர்‌ மருத்துவம்‌ மற்றும்‌ ஆயுர்வேதத்தை ஊக்குவிப்பதில்‌ இந்த பணிக்குழு நிபுணத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவைளை சுலைமான் நாஸிறூன், தன்னுடைய இளமைப் பருவத்திலேயே பல சமூக சேவைகளில் பல பணிகள் செய்து வருவதுடன், இவர் நிந்தவூர் நெஸ்கோ இளைஞர் கழகத்தின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.

இவர் நிந்தவூர் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் வை.எல். சுலைமாலெவ்வை - எம்.ஐ. லத்திபா ஆகியோர்களின் இளைய புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.