டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து நுழைந்துள்ளது.
டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்துள்ளது.
தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஜாஸ் பட்லர், பேர்ஸ்டோ ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.1 ஓவரில் 37 ரன்களே அடித்தது. பேர்ஸ்டோ 17 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பட்லர் 24 பந்தில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
3-வது விக்கெட்டுக்கு தாவித் மாலன் உடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தாவித் மாலன் 30 பந்தில் 41 ரன்களும், மொயீன் அலி ஆட்டமிழக்காமல் 37 பந்தில் 51 ரன்களும் சேர்த்தனர்.

Post a Comment
Post a Comment