கண்ணகிபுரம் கஜேந்திரன் எனும் 23 வயதுடைய இளைஞனே, யானை தாக்குதலில் பலி


 


வி.சுகிர்தகுமார் 0777113659 


  பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோமாரி வயல் பிரதேசத்தில் நேற்றிரவு யானை தாக்குதலுக்கு உள்ளாகிய  இளைஞன் ஒருவர் பலியானார்.
சம்பவத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் கண்ணகிகிராமத்தை 2ஜ சேர்ந்த துரையப்பா கஜேந்திரன் எனும் 23 வயதுடைய இளைஞனே பலியாகியுள்ளார்.
வயல் காவலுக்காக சென்றிருந்த நேரத்திலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.
சடலம் தற்போது பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொத்துவில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேநேரம் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் ஒரு இலட்சம் ரூபா இறுதிக்கிரியைகளை நடாத்தும் பொருட்டு இன்று உடனடியாக பிரதேச செயலாளர் வி.பபாகரனின் அறிவுறுத்தலின் பிரகாரம் வழங்கப்பட்டது.
யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி மரணிப்பவர்களின் குடும்பத்திற்கு அரசாங்கத்தினால் 10 இலட்சம் ரூபா வழங்கப்படும் நிலையில் அதன் முதற்கட்டமாக இன்று ஒரு இலட்சம் ரூபா உயிரிழந்தவரின் உறவினரின் வீட்டிற்கு சென்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.