அம்பாரை மாவட்டத்திலும் நன்னீர் மீன்வளர்ப்பு திட்டங்கள்



வி.சுகிர்தகுமார் 0777113659 


 எகெட் கரிஸ்தாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அம்பாரை மாவட்டத்திலும் நன்னீர் மீன்வளர்ப்பு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வறுமைக்கான காரணத்தை கவனத்தில் கொள்ளலும் உணவு பாதுகாப்பை உறுதி செய்தலும் எனும் தலைப்பின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் தீவுக்காலை பிரிவில் செபஸ்தியார் சமூக மட்ட அமைப்பின் வீட்டுத்தோட்ட பயனாளி இருவருக்கு தலாப்பியா இன வகையான நன்னீர் மீன்வளர்ப்பு மீன் குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு அம்பாரை மாவட்ட எகெட் கரிதாஸ் நிறுவனத்தின் இயக்குனர் அருட் தந்தை ஏ.ஜேசுதாசன் தலைமையின் கீழ் இடம்பெற்ற நிகழ்வில் திட்டமிடல் பொறுப்பதிகாரி சுபாகரன் மற்றும் கள உத்தியோகத்தர் நியூட்டன் நன்னீர் மீன் வளர்ப்பு உத்தியோகத்தர் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு மீன் குஞ்சுகளை குளத்தில் விடும் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.