எரிவாயு விநியோகத்தை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த உத்தரவு



 


இலங்கையின் உள்ளூர் சந்தைக்கான எரிவாயு விநியோகத்தை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அமைச்சர் லசந்த அழகியவன்ன இதனை அறிவித்துள்ளார்.

அதற்கமைய, நேற்று (02) முதல் மறு அறிவித்தல் வரை எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.