ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அமர்வுகளை பகிஷ்கரிக்க, தீர்மானம்


 


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அமர்வுகளை பகிஷ்கரிக்க தீர்மானித்துள்ளதாக லக்ஷ்மன் கிரியெல்ல எம் பி சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் ஆற்றும் உரைகளுக்காக சபைக்கு வெளியில் உள்ள மண்டபத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாக்குதல் அச்சத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அதனால் எதிர்க்கட்சி எம் பிக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை வரவு செலவுத் திட்ட விவாதங்களில் கலந்துகொள்ளாது சபை அமர்வுகளை புறக்கணிக்கப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று காலை பாராளுமன்ற சபைக்கு வெளியில் லொபியில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கிடையில் நடந்த மோதல் சம்பவமொன்றையடுத்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.