பொங்கல்விழாவில் அதிதிகள் மூவருக்கு கௌரவம்







காரைதீவு பிரதேசசபையின் வருடாந்த தித்திக்கும் தைப்பொங்கல்ப்பெருவிழா தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் பிரதேசசபையில் சிறப்பாக நடைபெற்றவேளையில் மூவருக்கு சிறப்புப்பாராட்டு கௌரவம் இடம்பெற்றது.பிரதமஅதிதியான கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பணிமனையின் தலைமை பொறியியலாளர் ஏ.எஸ்.கௌரிபாலன்,கௌரவ அதிதியான அம்பாறை மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் எஸ்.எல்.எ.கமல் நெத்மினி ,சாதனை அதிதியாக கலந்துகொண்ட கொழும்புமருத்துவபீடத்தில் அதிகூடிய 13தங்கப்பதக்கங்களைப்பெற்று முதல்தரமாணவியாக தெரிவுசெய்யப்பட்ட அக்கரைப்பற்றைச்சேர்ந்த சாதனை மாணவியும் ,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியஅதிகாரியுமான  டாக்டர் தர்ஷிகா தணிகாசலம் ஆகியோர்  பொன்னாடை போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.