குளவி கொட்டுக்கு இலக்காகி 35 மாணவர்கள் வைத்தியசாலையில்



 


வவுனியா, போகஸ்வெவ பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா தெற்கு சிங்கள கோட்ட பிரிவுக்குபட்ட போகஸ்வேவ மகா வித்தியாலயத்தில் காற்றின் காரணமாக மரம் ஒன்றில் காணப்பட்ட குளவி கலைந்து  பாடசாலை மாணவர்கள் மீது தாக்கியுள்ளது.