நிகழ்வுகள்



 


(சுகிர்தகுமார் )


  ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கடமையாற்றி ஓய்வு மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வும் வருட இறுதி ஒன்று கூடல் நிகழ்வும் தம்பட்டை சுவாட் நிலைய வெளியக அரங்கில் நேற்று நடைபெற்றது.

 பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற
நிகழ்வுகளில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் கணக்காளர் க.பிரகஸ்பதி நிருவாக உத்தியோகத்தர் க.சோபிதா திட்டமிடல் பணிப்பாளர் ஹசைன்டீன்  தலைமையக சமுர்த்தி முகாமையாளர் கிருபாகரன் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் பரிமளவாணி சில்வெஸ்டர் சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள்; ஓய்வு மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பிரதேச செயலாளரின் தலைமை உரையோடு ஆரம்பமான நிகழ்வில் ஓய்வு மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்கள் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளினால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து கணக்காளர் க.பிரகஸ்பதி தலைமையிலான இசை நிகழ்வும் ஆரம்பமானது.  

இசை நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இணைந்து கொண்டு பல பாடல்களை பாடி மகிழ்வித்திருந்தமை சிறப்பம்சமாக அமைந்திருந்தது.