அக்கரைப்பற்றிலும்,வங்கி ஊழியர்கள் அரசின் வரி அறவீட்டு திட்டத்திற்கு எதிர்ப்பு



 சுகிர்தகுமார் 


 அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்றிலும் இன்று அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் அரசின் வரி அறவீட்டு திட்டத்திற்கு எதிராக தமது எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையிலான அமைதியான பேரணி ஒன்றினை முன்னெடுத்தனர்.

அக்கரைப்பற்று கொமர்ஷியல் வங்கியின் முன்பாக ஒன்றிணைந்த அவர்கள் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியூடாக சென்று மணிக்கூட்டுக்கோபுரத்தை அடைந்து அங்கு சில நிமிடங்கள் தரித்து நின்று தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இதன்போது பல்வேறு சுலோக அட்டைகளையும் ஏந்தியவாறு வங்கி ஊழியர்களின் சம்பளம் மீதான வரி விதிப்பிற்கு எதிராக குரல் கொடுத்தனர்.

இதேநேரம் தமது கருத்துக்களையும் ஊடகங்களுக்கு வழங்கினர்.

பின்னர் அங்கிருந்து மீண்டும் ஊர்வலமாக கொமர்சியல் வங்கி வரை ஊர்வலமாக சென்று தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.