"மாகாண சபைகள்,உறங்கு நிலையில் உள்ளன "


 (வி.ரி. சகாதேவராஜா)



இலங்கையில் மாகாண சபைகள் ஏழு வருடங்களாக தேர்தல் இல்லாமல் உறங்கு நிலையில் இருக்கின்றன. எனவே இன்றைய உள்ளூராட்சி தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்பது பற்றி யாருக்கும் தெரியாது. 

இவ்வாறு காரைதீவு பிரதேச சபையின் இறுதி விசேட அமர்வில் உரையாற்றிய பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார் .


இருந்து செய்யக்கூடிய ஒரு வல்லமையை இறைவன் தந்திருக்கின்றான். பொதுமக்கள் தந்து இருந்தார்கள் நன்றிகள். அப்படி சேவை செய்துள்ளோம்.


இந்த இறுதி அமர்வில் உபதவிசாளர் ஏ எம். ஜாகீர், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்எச்எம் இஸ்மாயில், தமிழரசுக்கட்சி உறுப்பினர்களான எஸ்.நேசராஜா,சி. ஜெயராணி ,சுயேச்சைக்குழு உறுப்பினர் எஸ். சசிகுமார், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம். றனீஸ் ஆகிய ஆறு உறுப்பினர்கள் மாத்திரம் கலந்து கொண்டு இருந்தார்கள்.

அவர்களும் தனது நன்றி உரைகளை ஆற்றியிருந்தார்கள்.

சபையின் செயலாளர் அ.சுந்தரகுமார் உடனிருந்தார்